கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் விபத்து.மூவர் படுகாயம்.

 

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை(12)மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்து  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பிங் வாகனமும்,முச்சக்கர வண்டியும் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் சென்ற இரு பெண்கள் மற்றும் ஓட்டோ சாரதி உட்பட  மூன்றுபேர் இவ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அம்பியூலன்ஸ் வண்டியில் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு ஊறணி பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.சாரதிக்கு கால் உடைந்துள்ளதுடன், யுவதி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றது.

விபத்தினால் ஆட்டோவுக்கு பாரியசேதம் ஏற்பட்டுள்ளதுடன்,குறித்த விபத்து சம்பந்தமாக மேலதிக விசாரணையினை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts