கொரோனா முகாம் தொடர்பில் வீட்டுக்குள் முடங்கி எதிர்ப்பினைக் காட்டும் போராட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்பு

சகலவளிகளிலும் பின் தள்ளப்பட்ட எமது மாவட்டத்தின் நிலைமை அறிந்தும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை மட்டக்களப்பு புணானை கம்பசில் தடுத்து வைத்து கண்காணிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் வீட்டுக்குள் முடங்கி எதிர்ப்பினைக் காட்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மட்டக்களப்பு புணானை கம்பசில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப் படுவர் இதில் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறியப்பட்டால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்கின்ற விடயத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எமது நாட்டு பிரஜைகள் எவராவது பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற வேண்டிய தார்மிகத் தேவை எல்லோருக்கும் உள்ளது. அதேவேளை தொற்று வேகமாக பரவி வரும் நாட்டு பிரஜைகளை இங்கு அனுமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எமது மட்டக்களப்பு மாவட்டம் சகலவளிகளிலும் பின் தள்ளப்பட்ட மாவட்டம் இங்கு ஒருவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் எமது மட்டக்களப்பு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு, நினைத்து கூட பார்க்க முடிய நிலைக்கு எம் மாவட்டம் சென்றுவிடும் எனவே இச்செயற்பாட்டை அனுமதிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தி எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடக்கப்படும் வகையில் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி எமது எதிர்ப்பினை வெளிகாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இது நோயளர்களை எதிர்கும் நடவடிக்கை அல்ல எமது மாவட்டத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்காக நாம் எடுக்கும் உத்திகளில் ஒன்றேயாகும். உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் நலன் பெற இறைவனை வேண்டி பிராந்திப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts