கோர விபத்தில் தாய், இரு பெண் பிள்ளைகள் பலி !! மகன் படுகாயம் !!

பொத்துவில் – அக்கறைப்பற்று வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் அவரது இரு மகள்களும் பலியாகியுள்ள நிலையில் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் தாய், அவரது இருமகள்மார் மற்றும் மகனுடன் சென்றுகொண்டிருந்த போது அவ் வீதியால் சென்ற காரொன்று அவர்கள் நால்வர் மீதும் மோதியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 34 வயதுடைய தாயும் 6 வயது மற்றும் 12 வயதுடைய பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 11 வயதுடைய மகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts