புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி

தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகள், ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்படுமென, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்றது.

இப்பரீட்சையில், மூன்று இலட்சத்து ஐம்பத்தையாயிரத்து முன்னூற்றி இருபத்தாறு மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

நாடு தழுவிய ரீதியில், மூவாயிரத்து ஐம்பது பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts