துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக் குட்டிக்கு சிகிச்சை

கந்தலை வான்எல பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் காணப்பட்ட யானை குட்டியொன்றுக்கு வனஜீவராசிகள் அதிகாரிகளினால் சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது.

(25) குறித்த பகுதியில், சேற்றில் புதையுண்ட நிலையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் காணப்பட்ட குறித்த யானை குட்டியினை மீட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் விடுவித்ததாக தெரிவித்ததோடு, குறித்த யானை குட்டிக்கு 4 வயதேயாகுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related posts