க.பொ.த (உயர்) , 5ம் ஆண்டு புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான ‘ வித்யா ஹோமம்’

எதிர்வரும் க.பொ.த. உயர்தரம் மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவரக்ளுக்கு பரம்ஜோதி கல்வி சேவா சங்கத்திய் ஏற்பாட்டில் வித்தியாஹோமம் நடைபெறுவதற்கு ஏற்பாட்டு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வானது முற்றிலும் இலவசமாகவும் 109 எல்லை வீதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள பரம்ஜோதி கல்கி பவனான் தியான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் மாணவரக் ள் பொருத்தமான உடையில் நேரத்துடன் வருகை தருவதோடு வெள்ளை பூக்கள் கொண்டு வருமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துளள்னர். திறமையை வெளிக்கொணருதல், பெற்றோர்களுக்கிடையேயும் ஆசிரியர்களுக்கிடையிலான உறவு முறையை சீர்பப்டுத்தல், பரீட்சையில் மிகச் சிறந்த மதிப்பெண்களை பெறுவதை உருவாக்குதல், ஞாபகசக்தி, புத்திசாலித்தனத்தை அதிகரித்தல் என்பன வித்யா ஹேமத்தின் பலன்களாக உள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துளள்னர்.  

Related posts