சமாதான நீதவானாக தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் சத்தியப் பிரமாணம்:

அம்பாரை மாவட்டம் காரைதீவினைச் சேர்ந்த   தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக  12.06.2020 திகதியன்று    அம்பாரை மாவட்ட நீதிமன்ற நீதவான்  முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து  கொண்டார்.

கமு / கமு / இ.கி.மி பெண்கள் பாடசாலை காரைதீவில்  ஆசிரியராகக் கடமை புரியும் இவர், கடந்த 12 வருடங்களுக்கு மேலாக  சம்மாந்துறை கல்வி வலயத்தில் கமு / சது /வளத்தாப்பிட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரிய சேவை புரிந்தவராவார்.
 
தமது ஆரம்பக் கல்வியை கமு / கமு / விஷ்ணு வித்தியாலயத்திலும், இடைநிலை உயர்கல்வியை கமு/ கமு/ விபுலாநந்த மத்திய கல்லூரியிலும் பெற்றுக் கொண்டவர், வவுனியா தேசியக் கல்விக் கல்லூரியில் கற்பித்தல் தொடர்பான தேசிய கல்வி டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த இந்து சமய டிப்ளோமா பட்டதாரியாவார்.

 

Related posts