த.தவக்குமார்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கர்புரகிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி மிகநீண்ட நாட்களாக வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கு வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.டவ்யூ.எம்.ஆனந்தசிறி அவர்களின் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த இலவச குடிநீர் இணைப்பினை பெற்றுக் கொடுத்ததுள்ளனர்.
 
இவர்கள் எவ்விதமான அடிப்படை வசதிகளான குடிநீர்,மலசலகூடம் நிரந்தர வீடு இல்லாத நிலையில் கல்வி கற்று வரும் ஒரு பெண் குழந்தையுடன் தந்தை கூலி வேலை செய்து சிறு குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். இதனை கண்டறிந்த நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் இவர்களுக்கு நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினூடாக பணத்தினைச் செலுத்தி குடிநீர் இணைப்பினை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
 
இவர்களுக்குரிய நிரந்தர வீட்டுவசதியினையும் விரைவில் ஏற்படுத்தி கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளதாக நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related posts