சம்பந்தன் – ராகவன் சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, கொழும்பில் இன்று (08) சந்தித்துக் கலந்துரையாடினார்.

கலாநிதி சுரேன் ராகவன், வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

Related posts