சர்வதேச நீர்தினப் போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி முதலாம் இடம்

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன திணைக்களத்தால் பாடசாலை மாணவர்களுக்ளுக்கிடையே பல்வேறு போட்டிகளை இன்று வெள்ளிக்கிழமை(22)மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.வீ.எம்.அஷார் தலைமையில்!  நடாத்தி இருந்தனர்.வினாவிடை போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றிருந்தது.இரண்டாம் இடத்தை சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையும்,வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலை மூன்றாம் இடத்தையும் தட்டிக்கொண்டது.வெற்றி பெற்ற மாணவர்களுடன் கல்லூரியின் முதல்வர் இ.பாஸ்கர் மற்றும் பிரதியதிபர் எஸ்.சதீஸ்வரன் பொறுப்பாசிரியர் திருமதி. ஜெயகௌசல்யா வினாயகமூர்த்தி இருப்பதையும் படத்தில் காணலாம்

Related posts