மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும் ; ராஜித சேனாரத்ன

எதிர்வரும் நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜா-எலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதன் காரணமாக 07 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளது“ என தெரிவித்துள்ளார்.

விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பட உள்ளதாக அமைச்சர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts