சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு

 

சர்வதேச முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பில்  நடைபெற்றது

 ” நோய்தொற்று பேரிடர் இடையே முதியோர்களின் சவால்கள் ” எனும் தொனிப்பொருளில்  சிரேஷ்ட பிரஜைகளை பெருமை படுத்துமுகமாக 2020  ஆம் ஆண்டு முதியோர் தின நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும்  ,  இணைந்து ஏற்பாடு செய்யப்பட கிழக்குமாகாண சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும்  நிகழ்வு  மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர்   என் .மதிவண்ணன் தலைமையில்  மட்டக்களப்பு இந்து கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது நடைபெற்றது  . 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக   மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி  சுதர்சினி  ஸ்ரீகாந்த்  மற்றும் அதிதிகளாக  மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ,, சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள்  , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,  கிழக்குமாகாண முதியோர்  சம்மேளன  உறுப்பினர்கள் , மாவட்ட முதியோர் சங்கங்களின் உறுப்பினர்கள் , பிரதேச மட்ட சிரேஷ்ட பிரஜைகள்  என பலர்    கலந்துகொண்டனர்

கிழக்குமாகாண சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வில்  முதியோர்களை  பொன்னாடை போர்த்தி கௌரவித்து பரிசில்களும் நினைவு சின்னங்களும் வழங்கி  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts