” அம்மா என்னை விளையாட விடுங்கள் ‘ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

 

சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில்  ” அம்மா என்னை விளையாட விடுங்கள் ‘ எனும் தொனிப்பொருளில்   சிறுவர்தின  சிநேகபூர்வ கடினப்பந்து கிரிகெட்  சுற்றுப்போட்டி மட்டக்களப்பு இருதயபுரம்  ஈஸ்டன்  ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது   

சிறுவர்களுக்கிடையில்  கிரிகெட்  விளையாட்டினை  மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு   கிராமத்தின் ஊடாக  நியுவ்  ஈஸ்டன் விளையாட்டு கழகம்  மற்றும்  நியுவ்  ஈஸ்டன்  கிரிக்கெட் அமைப்பு முன்னெடுத்து வரும்  சிறுவர்களுக்கான கிரிகெட்  விளையாட்டினை   சர்வதேச சிறுவர்   தினமான  இன்றைய   தினத்தை சிறப்பிக்கும் வகையில்   கழக உறுப்பினர்களுடன் பெற்றோர்கள்  இணைந்து  50 ஓவர்கள் கொண்ட   கடினப்பந்து கிரிகெட்  சுற்றுப்போட்டி இன்று நடாத்தப்பட்டது

இந்த சிறுவர் தின  சிநேகபூர்வ கிரிகெட்  சுற்றுப்போட்டியில் கோட்டமுனை விளையாட்டு   கிராம உறுப்பினர்கள் , நியுவ்  ஈஸ்டன் விளையாட்டு கழகம்  மற்றும்  நியுவ்  ஈஸ்டன்  கிரிக்கெட் அமைப்பின் சிறுவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்

Related posts