சிறுமியைக் காயப்படுத்தியவருக்கு விளக்கமறியல்

சம்பூர், லங்கா பட்டனத்தில் வைத்து, ஜீப் வண்டியால் மோதி, 5 வயதுச் சிறுமியை காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரொருவரை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்,  (27) உத்தரவிட்டார்.

சம்பூர், லங்காப்பட்டணத்தில்  (26) இடம்பெற்ற இவ்விபத்தில் குறித்த சிறுமியின் இரு கால்களும் படுகாயங்களுக்குள்ளாகின.

மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தச் சிறுமி, தற்போது மேலதிகச் சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts