சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்தும் திகதி வெளியிடப்பட்டுள்ளது

நீண்ட கால நோய் தாக்கங்களை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர்களுக்கான வைத்திய கல்லூரி தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த சிறார்களுக்கு எதிர்வரும் 21ம் திகதி முதல் பைசர் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கல்லூரி குறிப்பிட்டுள்ளது.

இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கொழும்பு – பொரள்ளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது 

Related posts