சுரக்ஷா காப்புறுதி திட்டம் இடைநிறுத்தம் !

பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த -தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ய இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுரக்ஷா காப்புறுதி திட்டம் குறித்து ஜனாதிபதிக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த வருடத்திற்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts