சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரியாளர்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம்

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரியாளர்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறை குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக, சுவிட்சர்லாந்து நீதியமைச்சு தெரிவித்துள்ளதுஅமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிய சட்ட விதிகளின் மூலம், புகலிடம் பெற தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படவுள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு தேவையில்லை என அடையாளம் காணப்படுவோர் உடனடியாக நாடு கடத்தப்படவுள்ளனர்புதிய விதிகளுக்கு அமைய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts