சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்குப் பரிசில் வழங்கிவைப்பு

எஸ்.சபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மண்டூர் பிரதேச  பொது நூலகத்தினால் வாசிப்புமாதத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில் வழங்கும் நிகழ்வு நூலகத்தின் வாசகவட்டத்தலைவர் பரமானந்தராஜா தலைமையில் 25.11.2023 சனிக்கிழமை இடம்பெற்றது

இந்நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உப பொருளாளர் வி.பேரின்பராஜா மற்றும் பாணு தம்பதியினரின் 33 ஆவது திருமண நாளினை முன்னிட்டு இம் மாணவர்களுக்கான பரிசில்கள் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன

இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த தாய்ச் சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் இலங்கைக்கான இணைப்பாளரும் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தாய்ச்சங்கத்தின் உபபொருளாளர் வி.பேரின்பராஜா அவரது பாரியார் திருமதி பானு பேரின்பராஜா மற்றும் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் ஓய்வுநில பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் பொருளாளர் பாவாணர் அக்கரைப் பாக்கியன்; செயலாளர்  றோமிலா செங்கமலன் பிரதித் தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் பிரதிச்செயலாளர் ஊடகவியலாளர் சா.நடனசபேசன், உறுப்பினர்களான அதிபர் இ.ஜீவராஜ் அகிலன் யுதர்சன் மற்றும் நூலகர் ஜபாகீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts