சுவிஸ் உதயம் அமைப்பின் பொங்கல் விழா கொவிட் 19 காரணமாக இடைநிறுத்தம்

(சா.நடனசபேசன்)

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் எட்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் பொங்கல் விழா எதிர்வரும் 17 ஆம் திகதி சுவிஸ் நாட்டில் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தபோதும் உலகலாவிய ரீதியில் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொவிட் 19 வைரஸ் காரணமாக இம் முறை நடைபெறமாட்டாது என சுவிஸ் உதயம் அமைப்பின் நிருவாகத்தினர் மிகவும் மனவேதனையுடன் எமது செய்திப்பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.

அதாவது கொவிட் 19 வைரஸ் காரணமாகவும், அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மதித்தும் இவ் விழா இடைநிறுத்தப்பட்டதாக நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

????????????????????????????????????

Related posts