புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளையின் 123 வது பிறந்த தின நிகழ்வு

மண்முனைவடக்கு புளியந்தீவு  சமுர்த்தி வங்கியுடன்  புலவர் மணி நினைவு பணி   மன்றம்   இணைந்த ஏற்பாட்டில் தேசிய  வீரர் , இலக்கிய கலாநிதி  புலவர் பண்டித மணி,  பெரிய தம்பிப்பிள்ளையின்  123 வது  பிறந்த தின  நிகழ்வு  மட்டக்களப்பு  முதலியார்  வீதி  நினைவு பூங்காவில்  அமைக்கப்பட்டுள்ள புலவர் மணி   பெரிய தம்பிப்பிள்ளையின் உருவச்சிலைக்கு  மலர் மாலை அணிவித்து  சிறப்பிக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் மற்றும் . புலவர் மணி நினைவு பணி  மன்ற உறுப்பினர்கள் . சமுர்த்தி வாங்கி உத்தியோகத்தர்கள் ,  புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளையின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு  புலவர் மணியின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து 123 வது  பிறந்த தின நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது .

 இந்நிகழ்வு தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக  உறுப்பினர்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வு  சிறப்பிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது

Related posts