சேனைக்குடியிருப்பில் இரண்டு நாட்காட்டிகள் வெளியிட்டுவைப்பு

பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் பெரியகல்லாறு ஸ்ரீ பொட்டுப்பிள்ளையார் ஆலயம் சேனைக்குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயம் பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம் சித்தாண்டி ஸ்ரீமுருகன் ஆலயங்களின் பிரதமகுரு சிவ ஸ்ரீ விஜயவர்மன் குருக்கள் இவ்வாண்டுக்குரிய நாட்காட்டியை வெளியிட்டுவைத்தார்.
 
 
சேனைக்குடியிருப்பு ஸ்ரீ. சித்திவிநாயகர் ஆலயத்தில் இவ்வெளியீட்டு விழா சுகாதார நடைமுறைப்படி நடைபெற்றது.
 
அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியும் கலந்து சிறப்பித்தார்.
 
விஜயவர்மன் குருக்களின் தாய் தந்தை நினைவாக அமரா சிவ ஸ்ரீ ச.தனபாலசிங்கம் ஸ்ரீமதி செல்வராணி அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாகவும் மற்றும் அவரது மாமா மாமியாகிய அமரர் சோதிடர் விநாயகர் பூஜா துரந்தரர் சிவஸ்ரீ கா.நீதிநாதக்குருக்கள் அமரர் ஸ்ரீமதி நீ றுக்மணிதேவி தேவி ஆகியோரின் நினைவாக இரண்டு நாட்காட்டிகள் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் சிவஸ்ரீ அகிலவர்மன் குருக்கள் சிவஸ்ரீ கிருஷ்ணஜெகேந்திரன் குருக்கள் சிவஸ்ரீ குகிலேஸ்வரக்குருக்கள் மற்றும் ஆலயபரிபாலன சபை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts