வீணான வதந்தியால் வீணடிக்கப்பட்ட கல்வி!

கொரோனா நாம்வாழும் இந்த உலகை உலுக்கி பலவகையான தாக்கங்களைச் செலுத்திவருகின்றது. பலவிதமான எதிர்மறையான விளைவுகளையும் சந்தித்துவருகிறது.
இலங்கையில் இக்கொரோனாவின் தாக்கம் ஒருவருடகாலத்தை அண்மித்துள்ள இவ்வேளையில் கடந்த செவ்வாய்க்கிழமை புதுவகையான தாக்கமொன்று அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது.
 
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையிள்ள பாடசாலைகளில் மாணவர்க்கு கொரோனா பிசிஆர் சோதனை இடம்பெறுவதாக வதந்திபரவியதையடுத்து அங்கு பதட்டம் நிலவியதோடு பாடசாலைகளும் நேரகாலத்தோடு இழுத்துமூடப்பட்டன.
 
பாடசாலைகளில் மாணவர்களுக்கு பீ.சி.ஆர் எடுப்பதாகவும் சில மாணவர்களை பொலிஸாரும் சுகாதாரத் தரப்பினரும் பாடசாலைகளுக்குச் சென்று அழைத்துச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட வதந்தியை அடுத்தே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
இதனைக் கேள்வியுற்ற பெற்றோர் தம்பிள்ளைகளை வீட்டுகளுக்கு அழைத்துச் செல்ல முனைந்த போதே பாடசாலைகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது
சம்மாந்துறையில் பரப்பப்பட்ட பீ.சீ.ஆர்.வதந்தியால் பாடசாலைகளில் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து சம்மாந்துறையிலுள்ள பாடசாலைகளுக்குள் நுழைந்து தங்கள் பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
 
இச் சம்பவத்தால் சம்மாந்துறை பிரதேசப் பாடசாலைகளில் அல்லோல கல்லோல நிலைமை ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
 
சில பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் சென்ற நிலையில் தொடராகப் பாடசாலைகளை நோக்கிப் படையெடுத்த பெற்றோர் பாடசாலைகளின் நுழைவாயிலை முற்றுகையிட்டதுடன் தங்கள் பிள்ளைகளைத் தருமாறு நிருவாகத்தினரிடம் மன்றாட்டத்தில் ஈடுபட்டனர்.சிலர் அதிபர் ஆசிரியர்களுடன் வாக்கவாதத்திலும் ஈடுபட்டனர்.
சுகாதாரத்துறையினருடன் தொடர்புகொண்டபோது  மாணவர்களைப் பீ.சீ.ஆர். எடுத்த சம்பவம் எதுவும் சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில் நடக்கவில்லையென்று தெரியவந்தது.
 
மாணவர்களுக்கு பீ.சீ.ஆர். எடுத்த நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் இது வதந்தியென்றும் பாடசாலைகளுக்கு விஜயம் செய்த பொலிசார் தெரிவித்தனர்.
மொத்தத்தில் இரண்ட மணிநேர அல்லோலகல்லோத்தின் பிற்பாடு பாடசாலைகள் மூடப்பட்டன. ஆசிரியர்களும் அதிபர்களும் வெளியேறினர்.
 
  வீணான வதந்தியால் வீணடிக்கப்பட்ட கல்வி
  இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.சபூர்த்தம்பியிடம் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்.
 
எனது கோட்டத்தில் 37பாடசாலைகள் உள்ளன.  அதில் 9தமிழ்ப்பாடசாகைள் மீதி 28முஸ்லிம் பாடசாலைகள்.அங்கு 16000 மாணவர்கள் 1500ஆசிரியர்கள் உள்ளனர்.
இன்று காலை  10.30மணியளவில் பரப்பட்ட பிசிஆர்  வதந்தியால் பெற்றோர்கள் பாடசாலைகளை முற்றுகையிட்டு பிள்ளைகளை அழைத்துச்சென்றனர். சிலர் மதிலுக்கு மேலால் ஏறி உட்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தம் பிள்ளைகளை கூட்டிச்சென்றனர்.
இதனர் முஸ்லிம் பாடசாலைகள் 12மணியளவில்  இழுத்துமூடப்பட்டன. அனைவரும் வெளியேறினார்கள்.
 
ஒருவாறாக நீண்டநாளைக்குப்பிறகு இவ்வாரம்தான் பாடசாலைகள் வமைக்குத்திரும்பின. அதற்குள் இப்படியொரு துர்பாக்கியநிலைமை.இனி இந்த நிலைமையிலிருந்து விடுபட எத்தனை நாட்களாகுமோ தெரியாது. நான் ஊரிலுள்ள பள்ளிவாசல் நம்பிக்கையாளர்சபையிடம் கதைத்துள்ளேன்.எமது பணிப்பாளரிடமும் கூறியுள்ளேன். என்றார்.
 
அறிவிப்புகள்:
இவ்வாறு பொய்யான வதந்தியை ஆராயமல் பெற்றோர்கள் நடந்துகொண்டவிதம் பற்றி பலரும் விமர்சனம் செய்கின்ற அதேவேளை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் துரிதமாக இயங்கி மறுநாள் பாடசாலைகளை இயங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர்.
 
அதன் பிரதிபலிப்பாக சம்மாந்துறைப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ்.ஜ.எம்.கபீர் அன்று பிற்பகலில் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை நம்பிக்கையாளர் சம்மேளனத்தலைவர் அல்ஹாஜ் யு.எல்.மஹ்றூப் மதனியின் அனுமதியுடன் பொதுமக்களுக்கு விடுத்திருந்தார்.
 
அதாவது எமது பிரிவிற்குள் வேண்டுமென்றே விசமிகளால் பொய்யான வதந்தியொன்று பிசிஆர் சோதனை தொடர்பாக பரப்பப்பட்டுள்ளது.இது திட்டமிட்டசதி. இது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும்.
 
சம்மாந்துறை சுகாதாரப்பிரிவிற்குள் எமது அனுமதியின்றி யாரும் பிசிஆர் அல்லது அன்ரிஜன் சோதனையை மேற்கொள்ளமுடியாது. எனவே எதுவித அச்சமுமின்றி பெற்றார்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு வேண்டுகின்றேன் என்பதாகும்.
 
இவ்வறிவித்தல் பொது இடங்களில் ஒட்டப்பட்டதுடன் பள்ளிவாசல்களிலும் ஒலிபரப்பப்பட்டன.
இதனையடுத்து நேற்று(20) புதன்கிழமை அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டன. பெரும்பாலான மாணவர்கள் சமுமளித்திருந்தனர்.
 
எதற்காக பதட்டம்?
நிலைமை இவ்வாறிருக்க பிசிஆர் அல்லது அன்ரிஜன் என்றால் பெற்றோர்கள் ஏன் இவ்வாறு பதட்டப்படவேண்டும் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
பிசிஆர் என்றால் வேண்டத்தகாத ஒன்று என்ற அபிப்பிராயம் சமுகத்தின்மத்தியில் ஊடுருவியுள்ளதா? அல்லது பிசிஆர் என்றால் என்ன என்ற விழிப்புணர்வு இல்லையா? என்ற வினாவும் கூடவே எழுகிறது.
 
உண்மையில் பாடசாலைகளில் மாணவர்க்கு இத்தகைய பரிசோதனைகள் நடைபெறுகின்றதென்றால் முதலில் சுகாதாரத்துறை அதுபற்றி அறிவிக்கும். எனவே பெற்றோர்கள் உண்மையில் இப்பிசிஆர் சோதனைகள் இடம்பெறுகின்றதா? என்பது பற்றி ஆராய்ந்திருக்கவேண்டும். அதாவது அச்செய்தியை உறுதிப்படுத்தியிருக்கவேண்டும்.
 
மறுபக்கம் இத்தகைய பிசிஆர் சோதனை செய்வதால் எமக்கு என்ன நன்மை தீமை என்பது பற்றி ஆராய்ந்திருக்கவேண்டும். அவற்றையெல்லாம் விடுத்து அவசரஅவசரமாக அவ்வதந்தியை நம்பி பதட்டப்பட்டதை ஏற்கமுடியாது.
எங்களையும் சமுகத்தையும் காப்பாற்றவே இவைகள் செய்யப்படுகின்றன என்ற விழிப்புணர்வு ஊட்டப்படவேண்டும் என்றதேவை இங்கு எழுகிறது. எனவே பிசிஆர் பற்றியகுறிப்பைப் பார்ப்போம்.
 
பிசிஆர் PCR என்றால் என்ன?
 
இன்று உலகெங்கிலும் ஜாதிமதபிரதேச பேதமற்று  அதிகாக உச்சரிக்கப்படும் சொல் கொரோனா என்றால் அது மிகைப்பட்ட கூற்றல்ல. கொரோனா என்று உச்சரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கூடவே இன்னுமொரு சொல் உச்சரிக்கப்படும். அதுதான் பிசிஆர்.  
 
இந்த பிசிஆர் என்றால் என்ன? அதன் விரிவாக்கம் என்ன? இதனை எப்படி மேற்கொள்வது போன்ற விளக்கம் பலருக்குத் தெரியாது என்பது புதியவிடயமல்ல.
எனவே அதுபற்றி இங்கு பார்ப்போம்.
 
PCR எனப்படுவது Polymerase chain reaction  என 
பொருள் படுகின்றது.
 
ஒவ்வொரு உயிரினத்தின் செல்களிலும் DNA, RNA(நியூக்ளிக் அமிலங்கள்) என  இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் என ஏதாவது ஒன்றோ கண்டிப்பாக இருக்கும்.
 
அதுதான் அந்த உயிரினம் எப்படி வளர வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பதனை தீர்மானிக்கிறது.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் இது மாறுபடலாம்.
பெரும்பாலான உயிரினங்களில் DNA இருக்கும்.
 
அதேநேரம் சில வைரஸ் போன்ற கீழ்நிலை உயிரினங்களில் RNA மாத்திரமே இருக்கும்.
 
இந்த RNA வை வைத்து கிருமியைக் கண்டுபிடிப்பதுதான் Pஊசு வுநளவ என அழைக்கப்படுகின்றது.
 
முன்னர் காச நோய் உட்பட பல நோய்க்கிருமிகளைக் கண்டறிய இம்முறை கையாளப்பட்டு வந்துள்ளது.
 
வைரஸின் சRNA ஐ DNA ஆக மாற்றி அதன்மூலம் அது எந்த வகையான வைரஸ் என கண்டறிவதே RT-PCR  எனப்படுகின்றது.
கொவிட் – 19 வைரஸ் ஒரு RNA வைரஸ் வகையை சார்ந்தது.
அது கிருமிதானா என கண்டறிந்து உறுதி செய்யவே RT-PCR பரிசோதனை பயன்படுகிறது.
 
தொண்டை அல்லது மூக்கில் தடவி மெல்லிய சளி மாதிரியைஅல்லது செல்கள் எடுக்கப்பட்டு இந்த RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 
P.C.R. பரிசோதனையின் முடிவுகள் 4 – 6 மணித்தியாலங்களுக்குள் தெரிய வரும்.
இதைவிட அன்ரிஜன் சோதனையுமுண்டு. அது வேகமாக 15-நிமிடநேரத்துள் தொற்று பற்றி முடிவை அறிவிக்கும். தற்காலத்தில் பெரும்பாலும் சனத்தொகை கூடியஇடங்களில் இப்பரிசோதனைதான் செய்யப்படுகின்றது.
 
ஆக மூக்குத்துவாரத்தினுடாக இச்சோதனை இலகுவாக செய்யப்படுகிறதேயொழிய கஸ்டமான சோதனை அல்ல. தற்போது பிரதேச செயலகம் பிரதேசசபை  போன்ற நிறுவனங்களிலெல்லாம் இத்தகைய சோதனைகள் செய்யப்படுகின்றன.
 
ஆக இச்சோதனைகள் வேண்டத்தகாததல்ல என்பதனை மக்களுக்கு தெளிவூட்டவேண்டும்.
 
தடுப்பு மருந்து!
இதனிடையே அடுத்த மாத நடுப்பகுதிக்குள் இலங்கைக்கு தடுப்பூசிகள் தருவிக்கப்படுமென்று அரசாங்கம் கூறியுள்ளது. இந்தியா சீனா போன்ற நாடுகள் தடுப்புசியை தருவதற்;கு இணங்கியிருக்கின்றன.
 
அடுத்த இருவாரங்களில் இரண்டு லட்சம் ஒக்;போர்ட் ஆஸ்டாசனிக் தடுப்பூசிகளை கொண்டுவரப்படவிருக்கின்றன. உலகசுகாதார ஸ்தாபனமும் ஒரு லட்சம் தடுப்பூசிகளை தந்துதவவிருக்கிறது.
இச்செய்தி ஒருவகையில் இலங்கையயர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.
 
இந்தியா இங்கிலாந்து கூட்டுத்தயாரிப்பான கோவிஷீல்டு  கோவேக்ஷீன் ஆகிய கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருக்கின்றது. இந்தியாவிடம் 150 நாடுகள் இதனைக்கேட்டு விண்ப்பித்துள்ளது.
 
ஏற்கனவே இந்தியாவில் 30கோடி மக்களுக்கு முதலில்ஏற்றுவதைற்கு திட்டமிடப்பட்டு கடந்த சனிக்கிழமை 1.91 லட்சம் பேருக்கு தடுப்புமருந்துகள் ஊசிமூம் ஏற்றப்பட்டன.
இந்தியாவில் பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர்தான் இவ்வூசி வழங்க அனுமதிக்கப்பட்டது. இது பாதுகாப்பானது என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
 
இந்நிலையில் உலகெங்கும் பல நாடுகளிலும் கோடிக்கணக்கில் தினமும் ஏற்றப்பட்டுவருகின்றன.
ஒருசிலருக்கு அவர்களுக்கு ஏலவேயுள்ள வியாதிகாரணமாக மரணித்த சம்பவத்தைசில ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்தமையையும் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.
 
உலகிலிருந்து இக்கொடிய கொரோனாவை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சகலரும் ஒத்துழைத்து முன்னெடுக்கவேண்டும் என்பதே அனைவரதும் வேணவா.
 

Related posts