சொறிக்கல்முனை மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவு!கனடா அபி நற்பணிமன்றம் 5000 பெறுமதியான பொதி விநியோகம்.

சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமமான  சொறிக்கல்முனையின் மாற்றுத்திறனாளிகளுக்கு  ஒருதொகுதி உலருணவு நிவாரணம் நேற்று(30)  வழங்கப்பட்டது.
 
தொடரும்; கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பசியைப்போக்க கனடா டொராண்டோ கஜூ அபி நற்பணிமன்றம்   இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.
 
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5000ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.ஒவ்வொருவருக்கும் 25கிலோ அரிசி பால்மா உள்ளிட்ட உணவுவகைகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து.
 
இந்த  உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  உலருணவுப் பொதிகளை நேற்று   வழங்கிவைத்தார்.
மாற்றுத்திறனாளி அனுசியா தலைமையில் இடம்பெற்ற நிவாரணப்பணியை சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி  வழங்கிவைத்தார்.
 
அங்குள்ள ருபன் உள்ளிட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பணிக்கு ஒத்துழைத்தனர்.
பயனாளிகள் கருத்துரைக்கையில் கனடா டொராண்டோ கஜூ அபி நற்பணிமன்றிற்கு நன்றி தெரிவிக்கின்றஅதேவேளை அதனை இங்கு பெற்றுத்தந்த தவிசாளர் ஜெயசிறில் ஜயாவுக்கும் நன்றிகள் என்று  கூறினர்.

Related posts