ஜனநாயகத்தை காப்பாற்றுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஜனநாயகத்தை காப்பாற்றுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று(4.11.218)ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னாள் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதியே ஜனநாயகத்தை காப்பாற்று என வலியுறுத்தப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு முகாமையாளர் எஸ்.கார்திக் மற்றும் அமைப்பாளர் எம்.முஸ்தபா உட்பட அதன் பிரதேச அமைப்பாளர்கள் பிரதேச முகாமையாளர்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஜனநாயகத்தை காப்பாற்றுமாறு வலியுறுத்தப்பட்டதுடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சீனிக்கும் டீசலுக்கும் மக்கள் வாக்களிக்க வில்லை, தீர்வுத்திட்டம் தேவை, ஜனநாயகமா? புண நாயகமா? பாராளுமன்றத்தை உடன் கூட்டு, மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சி எமக்கு வேண்டாம் என்பன போன்ற வசனஙகள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

Related posts