ஜயங்கேணி பிரதேசத்தில் துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பற்றைக்குள் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (25) காலை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பெறுப்பதிகாரி எஸ்.எஸ்.எம். சமிந்த தலைமையில் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் எஸ். புரிசோத்தமன் உட்பட புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான இன்று காலை ஜயங்கேணி பிரதேசத்திலுள்ள பற்றைக்குள் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று அதன் மகசீன் ஒன்று ஆகியவற்றை மீட்டனர்.

இவ்வாறு மீட்டகப்பட்ட துப்பாக்கி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts