தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 253 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 9 ,282 பேர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் உட்பிரவேசிக்கும் 14 பகுதிகளில் நேற்று 1,967 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

Related posts