24 மணி நேரத்தில் கிழக்கில் மரணமானவர்களின் விபரம்

 திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

நேற்று (15) காலை 10 மணி முதல் இன்று (16) காலை 10 மணி வரை இத்தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், 57 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும்  206 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், திருகோணமலை பிராந்தியத்தில் 11 பேரும், கிண்ணியா, குறிஞ்சாங்கேணியில் தலா 6 பேரும், குச்சவெளியில் 4 பேரும், தம்பலகாமம், உப்புவெளி மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் தலா இருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்றுக் காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3ஆவது அலையில் 2,538 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts