தனியார் போக்குவரத்துச் சேவையில் சாரதியாக கடமையாற்றுகின்ற வரக்காப்பொலவை சேர்ந்த ஒருவருக்கு இன்று கொரோணா தொற்று இருப்பது பீ.சி.ஆர் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு நடாத்தப்படுகின்ற தனியார் போக்குவரத்துச் சேவையில் சாரதியாக கடமையாற்றுகின்ற வரக்காப்பொலவை சேர்ந்த ஒருவருக்கு இன்று கொரோணா தொற்று இருப்பது பீ.சி.ஆர் சோதனை மூலம்  உறுதி செய்யப்பட்டது. 

 
அதனை தொடர்ந்து அவருடன் தொடர்புகளை கொண்டிருந்த ஏனைய பொதுமக்களை தேடி அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் குழாம் விரைந்துள்ளது.
ஏற்கனவே தென் பகுதியிலிருந்து வந்த மாம்பழம் கொள்வனவு செய்கின்ற லொறி சாரதியுடன் வந்தவருக்கு கொரோணா தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து அக்கரைப்பற்றில் அவர் மாங்காய்களை கொள்வனவு செய்த மூன்று குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றதனர். அத்துடன் அவருடன் இணைந்து வந்திருந்த தென் பகுதியைச் சேர்ந்த மேலும் 19 பேர் இறக்காமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன. இந்தநிலையில் கல்முனைப் பிராந்தியத்தின்  வாழும் சகலரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு சுகாதார விதிகளை மிகவும் இறுக்கமாக கைக் கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்  தெரிவித்தார்.

Related posts