தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளை தெரிவு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் நிர்வாகத்தெரிவும் , கலந்துரையாடலும் பம்மபலப்பிட்டி அரச தொடர்மாடி சனசமூக நிலையத்தில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா  , பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி. துரைராசசிங்கம் ஆகியோரின் பங்குபற்றுதலோடு நடைபெற்றது .

கடந்த ஏழு வருடங்களாக தலைவராக செயற்பட்டிருந்த வே. தவராசா, இம்முறை தான் செயற்குழு உறுப்பினராக மாத்திரமே செயற்பட எண்ணியுள்ளார் எனவும் வேறொருவரை தலைவராக …தெரிவுசெய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் ஜனாதிபதி சட்டத்தரணி  தவராசா ( தமிழ் அரசுக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் ) மீளவும் ஏகோபித்த ஆதரவோடு தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார் .

செயலாளராக இளம் சட்டத்தரணி ஆனோல்ட் பிரியந்தன் , துணைத்தலைவராக திருமதி  மிதிலா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் . கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர்  இரகுபதி பாலசிறீதரன் , சமூக ஆர்வலர் இரட்ண வடிவேல் போன்றோரும் நிர்வாக குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

எதிர்வரும் மாகாண , நாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் சட்டத்தரணி தவராசா தலைமையில் தேர்தல் களம் காணவேண்டுமென்று கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts