தமிழ் இனத்தின் போராட்டத்தை திரிவுபடுத்திய சில ஊடகங்களின் பிழையான வெளிப்படுத்தல்களே 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம்

 

மக்களை பட்டினி போட்டதன் விளைவே கோத்தா ஓடியொழிக்க காரணம் : மக்களின் பணத்தை மக்களுக்கு திருப்பிக்கொடுக்க கோத்தாபய நாட்டுக்கு வரவேண்டும்
நிம்மதியாகவும்இ சுதந்திரமாகவும் தங்களின் மண்ணில் வாழ உரிமை கோரிய தமிழ் இனத்தின் போராட்டத்தை திரிவுபடுத்திய சில ஊடகங்களின் பிழையான வெளிப்படுத்தல்களே இந்த நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் என்ற ஒன்று ஏற்பட காரணமாக இருந்தது.
சிங்களவர்இ தமிழர்இ முஸ்லிம்இ கிறிஸ்தவர் என்ற எவ்வித பாகுபாடுகளுமின்றி இலங்கையர்களாக நாம் வாழ வேண்டும். 69 லட்சம் மக்களின் வாக்கை பெற்ற ஜனாதிபதி கோத்தாபய தன்னை நம்பிய அந்த மக்களை பட்டினி போட்டதன் விளைவாக அவர்கள் இட்ட சாபமும்இ பாதிக்கப்பட்ட மக்களின் பிராத்தனையுமே இன்று அவரை இந்த நிலைக்கு ஆட்கொண்டுள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

பாதைகள்இ மின்சார வசதிகள்இ குடிநீர் இணைப்புக்கள் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற மிகப் பின்தங்கிய அம்பாறை வீரகெட திஸ்ஸபுர பிரதேசத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ‘ரெலோ சர்வதேச அமைப்பின் நமக்காக நாம்’ வேலைத்திட்டத்தின் கீழ் வீரகெட திஸ்ஸபுர ஸ்ரீ சுதர்சநாராம விகாரையில் வைத்து உலருணவுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14) கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்விலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்இ
இலங்கையில் 30 வருடகால யுத்தம் இடம்பெற்றகாலத்தில் கூட இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை கசந்தித்ததே இல்லை ஆனால் இன்று உண்பதற்கு உணவு இல்லை எரிபொருள் இல்லை அனைத்துக்கும் வரிசையில்நின்று பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை எப்போது நீங்கும் மூவின மக்களும் நிம்மதியாக உணவு உண்ணக் கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும்.
இலங்கையில் சீனாவுக்கு தனிநாடு கொடுக்கப்பட்டு இருக்கின்றவேளையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை நீக்கப்பட்டு மூவின மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான நிலை உருவாக்கப்படாமல் இருக்கின்றது.
இலங்கையில் பிறந்த கோத்தாபய இலங்கையில் வாழ முடியாமல் இன்று அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றார். அவர் மக்களிடமிருந்து கொள்ளையடித்த மக்களின் பணத்தை மக்களுக்காக செலவழித்து விட்டு அவரது சொந்த நாட்டுக்கு வந்து வாழ வேண்டும். அவரை யாருமே நாட்டை விட்டு ஓடும்படி கேட்கவில்லை. மாறாக அவரது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் படிதான் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அரசியல்வாதிகள் மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் மக்கள் வரியையும் செலுத்திக்கொண்டு வாக்களித்து விட்டு இன்று வாழ்க்கையை தொலைத்துவிட்டு எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கிறார்கள். இந்த நிலை மாற கிராம மட்டத்திலிருந்து மாற்றம் வரவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கல்முனை சுமத்திராரம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்இ வீரகெட திஸ்ஸபுர ஸ்ரீ சுதர்சநாராம விகாராதிபதி திஸ்ஸானந்தபுர திஸ்ஸாநாம தேரர்இ கல்முனை மாநகர சபை உறுப்பினர் கதிரமலை செல்வராசாஇஉட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Related posts