தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் உருவப் பொம்மை எரிப்பு!

சட்டவிரோத மண் அகழ்வை பிடித்துக் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் அவர்களின் உருவப் பொம்மையை எரித்துள்ளனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சிறீநேசன் குடும்ப பிரச்சினைகளிலும் தலையீடு செய்வதாக கூறி மட்டக்களப்பு- கிரான் மக்கள் கவயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினா் சிறீநேசனின் உருவ பொம்மையினையும் எாித்திருக்கின்றாா்கள்.

கிரான் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணல் அகழ்வில ஈடுபடும் தொழிலாளிகள்இ இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர். கண்டனப் பேரணியின் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினரது பெயர் குறிக்கப்பட்ட உருவப் பொம்மை வீதியில் வைத்து ஆர்பாட்டாக்காரர்களால் எரியூட்டப்பட்டது.

மணல் அகழ்வு தொடர்பாக இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராற்றை நாடாளுமன்ற உறுப்பினர் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திஇ இரண்டு மணல் ஏற்றும் கூலித் தொழிலாளர்களை நீதிமன்றம் வரை கொண்டு சென்றமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related posts