தமிழ் தேசிய கூட்டமைப்பினை எப்படியாவது பிரித்துவிடவேண்டும் என சில பிரதிநிதிகள் செயற்படுகிறார்கள்

மத்தியில் உள்ள அதிகாரங்கள் பகிர்த்தளிக்கப்பட வேண்டும். பகிர்ந்த அதிகாரங்களை மத்திய அரசு மீளவும் பறித்துக்கொள்ளாத வகையில் அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நா்ாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் 32 ஆ வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மகிழடித்தீவு சந்தியிலுள்ள நினைவு தூபிக்கு முன்பாக நேற்று நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது,கொக்கட்டிச்சோலைப் படுகொலை என்பது மறுக்கமுடியாத மறைக்க முடியாத படுகொலையாக இருந்தாலும் கூட மறைக்கப்பட்ட ஒரு படுகொலையாக அரசின் இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கின்றன.விசாரணைகள் நடாத்தப்படுவதுமில்லை. விசாணைகள் நடாத்தப்பட்டால் குற்றவாளிகள் சுற்றவாளிகளாக அறிவிக்ப்படுவதுமுண்டு. பெரிய மனித உரிமைகள் புரிந்தவர்களை இந்த நாட்டின் இறைமையைக் காத்தவர்கள் என்ற வகையில் பூச்சியங்களை கதாநாயகர்களைக மாற்றுகின்ற சூத்திரமும் இந்த நாட்டுக்குண்டு.ஒரு நாட்டின் தேசிய இனத்தை இறைமை என்ற சொல்லினால் உரிமைகளைப் பறித்தெடுத்து தாங்கள் வெற்றிபெற்றவர்கள் என மார்பு தட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய போராளிகளின் பலம் இருந்த காலத்தில் பேச்சக்கள் நடைபெற்ற போது நாங்கள் பலமான சமஷ்டியைப் பெற்றுக்கொண்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இருக்கின்ற ஜனநாயக பலத்தை வைத்துக் கொண்டு எப்படியாவது ஒரு தீர்வைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுகிறது.தமிழ் தேசிய கூட்டமைப்பினை எப்படியாவது பிரித்துவிடவேண்டும் என சில பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டபைபை உடைத்துத் தருவேன் என்று ஒப்பந்தம் செய்து கொண்ட சில தரகர்கள் எமது கட்சியை உடைத்து பேரினவாத கழுகுகளின் இரைகளாக்கிவிடுவோம் என செயற்படுகிறார்கள்.இந்தப் பிரதிநிதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதன் மூலம் பேரினவாதிகளுக்கு மகிழ்சியூட்டுகின்ற செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற சிலரை குறிவைத்து தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.ஓக்டோபர் சூழ்ச்சியில் திடீரென ஒருவர் பிரதமராக வரும்போது அவருக்கு பல அனுசரணைகள் செய்யப்பட்டன. அந்த காலத்தில் உண்மைகள் ஒழிக்கப்பட்டன.தற்போது புதிய அரசமைப்பு எட்டிப்பிடிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு முழுமையான சமஷ்டியொன்றினை இந்த அரசு கொடுக்கப்போகிறது என தென்னிலங்கையில் எதிரணியினர் பரப்புலை செய்கின்றார்கள். மறுபக்கம் எமது உறவுகள் தீர்வு ஒன்றும் கிடையாது என கூறுகிறார்கள். சமஷ்டி என்று வரும்போது அதில் இருக்க வேண்டிய பண்புகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்’சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசமைப்ப உருவாக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஒரு மித்த நாடு என்ற அடிப்படையில் ஏமாற்றுகின்றார்கள் என்ற பரப்புரை தென்னிலங்கையில் வலுவாகக் கொண்டு செல்லப்படுகிறது. என்றார் 

Related posts