துறைநீலாவணையில் பொறியியலாளர் மேகநாதன் பாராட்டிக் கௌரவிப்பு


(சா.நடனசபேசன்)
துறைநீலாவணை மண்ணில் பிறந்து அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சமூகசேவகர் பொறியியலாளர் நா.மேகநாதன் அவர்களது சமூகசேவையினை பாராட்டி அவரைக் கௌரவிக்கும் நிகழ்வு துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை 29 ஆம்திகதி அவ் அமைப்பின் தலைவர் எஸ்.அரங்கநாதன் தலைமையில் துறைநீலாவணை தெற்கு பல்தேவைக்கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து பொறியியலாளர் ஆ.பவித்திரன் துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் கா.யோகராசா துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் எஸ்.செல்வம் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரி.தயாளன் கணக்காய்வுத்திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related posts