தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை திறந்துவைப்பு


தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையை கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள்  நீதியரசரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர் இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன்,  ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன்,  கணக்காளர் ராஜாதுரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் எம். சதீஸ் உள்ளீட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இப்பணிமனையானது மட்டக்களப்பு மாமாங்கம் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள 51/7 இலக்க      கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் கட்சி தொடர்பான மக்கள் சந்திப்புக்கள் மாதாந்த ஒன்றுகூடல்கள் இப்பணிமணையிலேயே நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ். சோமசுந்தரம் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts