தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு  கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அதன் படகு சின்னத்தில் களமிறங்கின்றது.
 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் நேற்று தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது.
 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.சிறையில் உள்ள கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த வேட்பாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
 
இதில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் வேட்பாளராக இணைக்கப்படாத சட்டத்தரணி மங்களேஸ்வரியும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வேட்பாளராக இணைக்கப்பட்டுள்ளார்.
 
இவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்றது.
 
இதன்போது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் அதில் கட்சி உறுப்பினர்கள்,முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

Related posts