தலைவர் சி. சந்திரகாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் அமைச்சரை சந்தித்து கோட்டைமுனை விளையாட்டு கிராமக்குழு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் கடின பந்து கிரிக்கட் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா சம்பந்தமாக  கோட்டைமுனை  விளையாட்டு கிராம உறுப்பினர்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையேயான கலந்துரையாடல்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட  அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது
 
 அலரிமாளிகையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்சொயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி த. ஈஸ்வரராஜா
 கோட்டைமுனை விளையாட்டு கிராம உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
 மட்டக்களப்பு மாவட்டத்தில்  கிரிக்கெட் கடின பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக இவ் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மற்றும் தேசிய மட்டத்திலான போட்டிகளும் இங்கே இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது  

Related posts