தாண்டியடி மக்களுக்கு அகவம் அமைப்பால் உலருணவு!

இலங்கையில் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணப்பணிகள் பல்வேறு அமைப்புக்களாலும்  தனவந்தர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
 
அந்தவகையில் நேற்று  திருக்கோவில்  பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாண்டியடி விநாயகபுரம் தம்பட்டை போன்ற பகுதிகளுக்கு நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
 
கனடா ‘அகவம் ‘அமைப்பின் நிதியுதவியுடன் காரைதீவு தவிசாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய கி.ஜெயசிறில் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய வீ.ரி.சகாதேவராஜா இளம் விஞ்ஞானி சமூக செயற்பாட்டாளர்.வினோஜ்குமார் ஆகிய குழுவினரால் மேற் குறித்த நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இக் குழுவினரால் அம்பாரை மாவட்டத்தில் காணப்படுகின்ற 30 ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு (பொத்துவில் தொடக்கம் மத்தியமுகாம் நாவிதன்வெளி) மக்களின் அத்தியாவசிய தேவை கருதி இரண்டாம்  மூன்றாம் கட்டமாக தங்களது நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். தொடர்ச்சியாக மக்களுக்கு இவர்களது நிவாரணப்பணி தொடரவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts