திங்கள்கிழமை 6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் ஆரம்பம் : அரசாங்க தகவல் திணைக்களம்

இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை மறுதினம் (06) பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எனினும், 6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசாங்கத்தினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts