திருகோணமலை நீதிபதி இளஞ்செழியனின் முன்பாக பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்


                                                காரைதீவு நிருபர்
கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமனம் வழங்கப்பட்டு உள்ள பொறியியலாளர் தேசமான்ய வீரகத்தி கிருஷ்ணமூர்த்திகடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் முன்னிலையில் சம்பிரதாயபூர்வமாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
ஆணைக்குழுவின் தலைவர் நஜீப் ஏ. மஜித், பணிப்பாளர் சபையின் மற்றுமொரு உறுப்பினர் ஆகியோரும் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

கிருஷ்ணமூர்த்தி காரைதீவின் கன்னி பிரதேச சபையின் பிரதி தவிசாளராக விளங்கியவர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளராக உள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா இவரை கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடந்த மாதம் நியமித்தார்.

Related posts