இலங்கை மின்சாரசபையின் ஆறாயிரம் மேன்பவர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

இலங்கை மின்சார சபையின் ஆறாயிரம் மேன்பவர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
சில தொடர்பு அதிகாரிகளுக்கும் இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் பரீட்சையின் மூலம் ஆட்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் பல மாகாணங்களில் 83 தொடர்பு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இவ்வாறு ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமைக்காக தாம் அரசாங்கத்திற்கு நன்றி கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.

Related posts