திருக்கோவில் பிரதேசத்தில் பாரம்பரிய நெல் அறுவடை விழா

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்யும் திட்டத்தின் நோக்கத்திற்கு அமைவாக அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் சேனைக்காடு விவசாய கண்டத்தில் ஹெலசுவய நிறுவனமும் தம்பிலுவில் கமநல சேவைத் திணைக்களமும் இணைந்து நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு இருந்த நெற் செய்கையில் நெல் அறுவடை விழா தமிழர்களின் பாரம்பரிய முறையில் இடம்பெற்று இருந்தன.
 
இந்நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் சேனைக்காடு விவசாயக் கண்டத்தில் இடம்பெற்று இருந்ததுடன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்து இருந்தனர்.
 
இதன்போது அதிதிகளுக்கு மாலை அணிவித்து பாரம்பரிய முறையில் வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு தொடர்ந்து இந்து கிருஸ்தவ மத அனுஷ்டானங்களுடன் நெல் அறுவடை விழா ஆரம்பமாகி இருந்தன.
 
இதனைத் தொடர்ந்து விநாயகபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆறுமுக கிருபாககர சர்மாவினால் சூரிய பகவானுக்கு பூஜைகள் இடம்பெற்றன இதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாக்கா அவர்களினால் சம்பிரதாய ரீதியாக நெல் அறுவடை ஆரம்பித்து வைத்தார்.
 
இதனைத் தொடர்ந்து மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் அதிதிகள் நெல் அறுவடையில் கலந்து கொண்டு இருந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து அதிதிகளினால் தமிழ் சிஙகள் மக்களின் பாரம்பரிய விவசாய முறைகள் தொடர்பாகவும் சிறப்புரைகளும் இடம்பெற்று இருந்தன.
 
இவ் நெல் அறுவடை விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஹெலசுவய நிறுவனத்தின் உயர் பீட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

Related posts