தீயில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவிகள்

மட்டக்களப்பு சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி கிராமத்தில் தீயில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவிகள்  வழங்கி வைக்கப்பட்டது.

 
சந்திவெளி நாவலடி ஜீவபுரம் வீதியில் வசிக்கும்  அழகையா தெய்வநாயகம் (71 வயது) மற்றும் நாகமணி யோகம்மா (77வயது) என்பவர்கள் வசித்து வந்த நிலையில் குடிசை வீடு முற்றாக தீயில் எரிந்துள்ளது.
 
மனைவி சோறு சமைத்த நிலையில் கீரை வகை பறிக்க சென்ற சமயத்தில் குடிசை வீட்டில் தீ பரவுவதை அவதானித்த மனைவி உடமைகளை எடுக்க வீட்டிற்குள் செல்வதை அறிந்த நான் அவரை வெளியில் அழைத்து வர முற்பட்டபோது ஓலையில் உள்ள தீ எனது உடலில் பற்றிக் கொண்டதால் எனக்கு தீ காயம் ஏற்பட்டதுடன் மனைவிக்கும் சிறு காயம் ஏற்பட்டதாக அழகையா தெய்வநாயகம் (71 வயது) தெரிவித்தார்.
 
இதன்காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் அனுசரனையில் கனடாவில் வசிக்கும் பொறியியலாளர்
ஜெயக்குமார் சின்னத்துரை மற்றும் P.பிரசாந்த் (SP Auto) ஆகியோர் வழங்கிய நிதி உதவி மூலம் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
 
இதன்போது   வீட்டுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள்,  உலர் உணவு பொருட்கள் மற்றும் சிறுதொகை பணம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
 
நிகழ்வில் மட்டக்களப்பு  மற்றும் கல்குடா தொகுதி கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts