துறைநீலாவணையில் 15 நாட்களாக காணாமற்போன வயோதிபத்தாய்.

துறைநீலாவணையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான வயோதிபத்தாயை கடந்த 02-07-2018 திகதி காணவில்லை என அவரது பிள்ளைகள்,உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.காணாமற்போனது  விடயமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 4.7.2018 திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை 7ம் வட்டாரத்தை சேர்ந்த
திருமதி.கண்ணகை கணபதிப்பிள்ளை அவர்களை இன்றுவரையும் காணவில்லை.வீட்டிலிருந்து கல்முனை வைத்தியசாலைக்கு செல்வதாக தனது மகளிடம் கூறிவிட்டு இவர் சென்றுள்ளார்.வைத்தியசாலைக்கு சென்றவர் மீண்டும் திரும்பாத நிலையில் அவரது பிள்ளைகள்,உறவினர்கள் அவரது சொந்தக்காரர்களின் வீடுகளிலும்,வைத்தியசாலைகளிலும்,பொது இடங்களிலும் நம்பிக்கையுடன் தேடிவருகின்றார்கள்.நம்பிக்கையுடன் தேடிவரும் உறவுகள் பலத்த ஏமாற்றங்களுடன் காணப்படுகின்றார்கள்.

இவரை பொதுவிடங்களிலும்,மக்கள் நடமாற்றமுள்ள இடங்களிலும் இவரைக் கண்டால் ;கண்டவர்கள் உடன் பின்வரும் தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு அவர் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும்.
க.விஜயரெத்தினம் (ஊடகவியலாளர்) -0778602831,(க.கதாகரன்-0774352174,0757573030)எனும் இலகத்துடன்  தொடர்பு கொண்டு தெரிவித்தால் அவரது குடும்பத்தாருக்கு மனஆறுதல்களை பெறுவதோடு மகிழ்ச்சியாகவும் அவரது பிள்ளைகள் இருப்பார்கள்.வீணாக அலைய வேண்டியதில்லை.

Related posts