துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டுள்ளது

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள குளக்கட்டில் மருதமுனை,பெரியநீலாவணை கிராமத்தில் உள்ள கோழிக்கடை உரிமையாளர்களினால் அறுத்த கோழிக்கழிவுகள் வீசப்பட்டுள்ளது.இச்சம்பம் இன்று வியாழக்கிழமை(5.7.2018)  காலைவேளை வீசப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதானவீதிகள்,குளக்கட்டுக்களில் மிக நீண்டகாலமாக கோழிக்கடைக்கழிவுகள்,மற்றும் விலங்குங்கழிவுகள்,வீட்டுக்கழிவுகளை உரப்பைகளில் பொதியிடப்பட்டு சூட்சுமமான முறையில் ஆட்டோக்களிலும்,சிறியரக வாகனங்களிலும் வீசிவருகின்றார்கள்.இதுவொரு பாரியதொரு கேவலமான கீழ்தரமான செயற்பாடாகும்.

துறைநீலாவணை கிராமத்தில் உள்ள ஊடகவியலாளர்கள், பொதுமக்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கோழிக்கடை உரிமையாளர்களை வண்மையாக கண்டிப்பதோடு இவ்வாறானகீழ்த்தரமான செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறாமல் நிறுத்தப்படுவதோடு இனிமேல் இக்கேவலமான செயற்பாடுகளை மருதமுனை கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் சம்மேளனம்,மதப்பெரியார்கள் இணைந்து கோழிக்கடை உரிமையாளர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதோடு கோழிக்கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை தடுத்துநிறுத்தி மற்ற சமூகங்களுக்கு இன வன்முறைகளை தூண்டாதவர்களுக்கு மட்டுமே கோழிக்கடை அனுமதிப்பத்திரம் அனுமதிக்க வேண்டும்.

இந்த விடயமாக கல்முனை மாநகரசபை மேயர்,களுதாவளை பிரதேச தவிசாளர்,செயலாளர், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் போன்றோர்கள் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென துறைநீலாவணை கிராமத்தில் உள்ள ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள்,பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.இந்தப்பிரச்சனை மென்மேலும் அதிகரிப்பதற்கு சிவில் பாதுகாப்பு குழுக்களின் அசமந்தப்போக்கும்,பொலிசாரின் தூரநோக்கற்ற செயற்பாடாகும்.

Related posts