துறைநீலாவணை ஸ்ரீதில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்.

மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீதில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தி அலங்கார உற்சவம் 3 ஆம் திகதி  திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 13 ஆம் திகதி வியாழக்கிழமை  காலை தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய உள்ளது.

ஆலய உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு  9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாம்பழத்திருவிழாவும்   10 ஆம் திகதி திங்கட்கிழமை விநாயகர் பெருமானின் உருவச்சிலையினை ஊர்வலமாக சித்திவிநாயகர்ஆலயம், கண்ணகியம்மன்ஆலயம், மாரியம்மன்ஆலயம் ,உச்சிமாகாளியம்மன் ஆலயங்களுக்கு எடுத்துச் சென்று கிராமத்தினைச் சுற்றிவர இருப்பதுடன்  11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்டைத்திருவிழாவும் 12 ஆம் திகதி புதன்கிழமை பாற்குடப்பவனியும் இடம்பெறஇருப்பதுடன் 13 ஆம் திகதி அதிகாலை துறைநீலாவணையின் வடக்கு எல்லையில் மட்டக்களப்பு வாவியின் கண்ணகியம்மன் ஆலய முன்றலில்  தீர்த்த உற்சவம் இடம்பெற இருக்கின்றது.

Related posts