தூண்டில் போடச் சென்ற குடும்பஸ்தர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 35ஆம் கிராமத்தில்
  நான்கு பிள்ளைகளின் தந்தை ஆற்றுக்கு தூண்டில் போடச் சென்றவர் சடரமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று 4ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
 
இதில் 35ஆம் கிராமம் கண்ணபுரம் கிழக்கைச் சேர்ந்த 37 வயதுடைய  வேலு பாலசுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் சம்பவ தினமான நேற்று காலை உணவருந்திவிட்டு தனது வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காக தூண்டிலோடு சென்றவர் வீடு திரும்பத நிலையில் உறவினர் இவரை தேட ஆரம்பித்துள்ளனர்.பின்னர் இவர் மீன்பிடிக்க சென்ற ஆற்ரை அண்டிய பிரதேசத்தில் அவர் மீன்பிடிக்க கொண்டு சென்ற தூண்டில் மற்றும் மண்வெட்டி காணப்பட்டததையடுத்து இவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
 
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களின் பணிப்புக்கமைய திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளார்.
சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts