தேர்தலை பழைய முறையில் நடாத்துவதாக இருந்தாலும் புதிதாக சட்ட மூலம்

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடாத்துவதென இதுவரையில் தீர்மானம் இல்லையெனவும் பழைய முறையில் நடாத்துவதாக இருந்தாலும் புதிதாக சட்ட மூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியி செவ்வியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடாத்துவதற்கு முடியாது. புதிய சட்ட மூலம் ஒன்றினால் பழைய முறைமையை மீண்டும் சட்ட மாக்கினால் மட்டுமே அது முடியும். புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நடைமுறையில் இருந்து வந்த பழைய தேர்தல் முறைமை குறித்த 1988 ஆம் இலக்க 2 ஆம் பிரிவு நீக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts