தேர்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்போதே நீதிமன்றம் மேற்கண்டவாறும் தேர்தல்கள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுப்பதற்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts