நடிகர் விவேக்கின் மறைவு உலகதமிழர்களுக்கே பேரிழப்பாகும்!பிரபலசமுக சேவையாளர் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் அனுதாபம்.

கடைசி இலங்கைத் தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது என்று ஆணித்தரமாகக்கூறிய நடிகர் சமூக சேவையாளர் விவேக் காலமான செய்தி தாயகமக்களை துயரத்திலாழ்த்தியுள்ளது. அன்னாரின் இழப்பானது உலகதமிழர்களுக்கே பேரிழப்பாகும்..அன்னாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என பிரபலசமுக சேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள இரங்கல்செய்தியில் குறிப்பிட்டுள்ளரர்.
 
அவரது செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகமக்கள் நன்றாக இயற்கையாக ஒட்சிசனை சுவாசிக்கவேண்டும் இயற்கை பசுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக பலலட்ச மரக்கன்றுகளை எவ்வித விளம்பரமுமமின்றி நட்ட மகத்தான சேவையாளன் விவேக்.
 
தமிழர்களுடைய மன மகிழ்ச்சிக்காகவும் தமிழ் மொழியை சிறந்த மொழி எனவும் தமிழர்கள் தமிழ் பேசுவது முன்னுரிமை என்றும் உங்களுடைய நடிப்பின் ஊடாக வெளிப்படுத்தி இருந்தீர்கள் பிறந்தவர் இறந்தே ஆகவேண்டும் இதுதான் உலக நீதியாகும் பிறப்பு நிச்சயிக்கப் படவில்லை இறப்பு நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது
உலகத்தில் பிறக்கும் எல்லோரும் நடிகர்தான் அதில் அதிவிஷேடமானவர் “சின்னக்கலைவாணர் ” என அழைக்கப்படும்நடிகர் விவேக் என்பது யாராலும்மறுக்கமுடியாது. 
 
அவர் இலங்கைக்கு வந்த
பொழுது இலங்கையர் பேசும் தமிழ் உச்சரிப்பு பற்றி பெருமையாக  மட்டக்களப்பில் பேசியிருந்தார்கள்..இலங்கையில் தாயகத்தில் தமிழ் மொழியை சிறப்பாக பேசுகின்றவர்கள் மட்டக்களப்பு தமிழர்கள் என்று மட்டக்களப்பிலே ஒரு நிகழ்வில் பேசிஉறுதிப் படுத்தி இருந்தீர்கள். அவ்வாறான உணர்வாளனை  இழந்திருக்கின்றோம் உங்களுடைய ஆத்மா சாந்தியடைய தாயகம் சார்பாக பிராத்திக்கின்றேன் 

Related posts