எம் கடமை உறவுகளால் வீடு கையளிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காந்திபுரம் கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு வாழ்கின்ற மக்களுக்கு  எம் கடமை உறவுகளால்  (17 )  வீடு  கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
 
 வீடு கட்டுவதற்கான முழு நிர்மாண உதவிகள் கனடா நாட்டில் வாழும்  சற்குணகுமார் சந்திரவதி குடும்பம்(கனடா.பிரம்ரன்) ஆகியோர்களின் முழு நிதி பங்களிப்புடன் வீடு கட்டுவதற்கான முழு கட்டுமான பணிகளையும்  எம்கடமை உறவுகளான ஆசிரியர்களான சு.பரமேஸ்வரன்,ஆர். துஷாந், பி. புஸ்பநாதன் தலைமையில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.
 
 கையளிக்கும் நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்ட மட்/ பட்/பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய அதிபர் ஆ. புட்கரன் அவர்களினால் வீடு திறந்து வைக்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர்கள்   இறை வழிபாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts